தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவி வேளாண்மை அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும். 326 பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஜூலை 16-ந் தேதி நடக்கிறது.
குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. 682 பணியிடங்கள் கொண்ட இந்த தேர்வு ஆகஸ்டு 6-ந் தேதி நடைபெறும்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு ஜூன் முதல் வாரம் அறிவிப்பு வெளியாக உள்ளது. 494 பணியிடங்களுக்கான இந்த தேர்வு செப்டம்பர் 17-ந் தேதி நடத்தப்படும்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 2-வது வாரத்தில் வெளியாகிறது. 100 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதி நடைபெறும்.
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியாகும். 1788 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 2018-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி நடைபெறுகிறது.
மொத்தத்தில் இந்த வருடம் 26 வகையான தேர்வுகள் நடத்தப்படும். அடுத்த வருடம் 2 தேர்வு நடத்தப்படும். 28 தேர்வுகளிலும் சேர்ந்து 3 ஆயிரத்து 781 பேர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
தேர்வாணையத்தால் பட்டியலிடப்பட்ட பணிகள், பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்பட முடியாவிட்டால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகக்கூடும். காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்கு பிறகோ கூட மாறுதலுக்கு உட்பட்டது.
உதவி வேளாண்மை அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும். 326 பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஜூலை 16-ந் தேதி நடக்கிறது.
குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. 682 பணியிடங்கள் கொண்ட இந்த தேர்வு ஆகஸ்டு 6-ந் தேதி நடைபெறும்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு ஜூன் முதல் வாரம் அறிவிப்பு வெளியாக உள்ளது. 494 பணியிடங்களுக்கான இந்த தேர்வு செப்டம்பர் 17-ந் தேதி நடத்தப்படும்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 2-வது வாரத்தில் வெளியாகிறது. 100 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதி நடைபெறும்.
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியாகும். 1788 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 2018-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி நடைபெறுகிறது.
மொத்தத்தில் இந்த வருடம் 26 வகையான தேர்வுகள் நடத்தப்படும். அடுத்த வருடம் 2 தேர்வு நடத்தப்படும். 28 தேர்வுகளிலும் சேர்ந்து 3 ஆயிரத்து 781 பேர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
தேர்வாணையத்தால் பட்டியலிடப்பட்ட பணிகள், பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்பட முடியாவிட்டால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகக்கூடும். காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்கு பிறகோ கூட மாறுதலுக்கு உட்பட்டது.
No comments:
Post a Comment